சென்னை: நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி இன்று முதல் 3 நாள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்த நிலையில் சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்ததன் 75வது ஆண்டு கொண்டாட்டம் வரும் திங்கட்கிழமை நடைபெற உள்ளது. இதனை கோலாகலமாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு பல்வேறு இயக்கங்களை நடத்தி வருகிறது.
‘ஆஸாதி கா அம்ருத் மஹோத்ஸவ்’ எனும் பெயரில் இந்த சுதந்திர தினம் கடந்த ஓராண்டாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு செய்யப்பட்டன.
பிரதமர் மோடியால் பெரிய நிறுவனங்கள் தான் பயன்பெறுது! 51 சதவீத மக்கள் ஒப்புதல்! வெளியான சர்வே முடிவு
3 நாள் தேசியக்கொடி ஏற்றனும்
மேலும் ஒவ்வொருவரும் திங்களின் சமூக வலைதள பக்கங்களின் முகப்பில் தேசியக்கொடியை படமாக வைக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறி இருந்தார். அதன்படி ஏராளமானவர்கள் சமூக வலைதள பக்கங்களின் படத்தை மாற்றியள்ளனர். மேலும் ‘ஹர் கர் திரங்கா'(இல்லம்தோறும் மூவர்ணக் கொடி) எனும் இயக்கத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் ஆகஸ்ட் 13ம் தேதி (நாளை) முதல் 15 வரை 3 நாட்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்திலும் கொண்டாட்டம்
மேலும் மத்திய அரசு அலுவலகங்கள், மாநில அரசு அலுவலகங்கள் தேசியக்கொடி போன்று மின்னொளியில் ஜொலித்து வருகின்றன. இதனால் இந்தியா முழுவதும் சுதந்திர தினம் களைக்கட்டியுள்ளது. தமிழகத்திலும் சுதந்திர தினம் விமரிசயைாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மேலும் சுதந்திர தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு
இந்நிலையில் தான் சென்னை பெருநகர மாநகராட்சி சுதந்திர தினம் கொண்டாட்டம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய அளவில் “சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா” என அனைத்து வீடுகளிலும் ஆகஸ்ட் 13(நாளை) முதல் 15 வரை தேசியக்கொடி ஏற்றி, தேசப்பக்தி உணர்வை மேலும் வலுப்படுத்தும் விதமாக கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேசியக்கொடி ஏற்ற விழிப்புணர்வு
அதன்படி நாளை முதல் 15-ந்தேதி வரை அனைத்து வீடுகளிலும், கடைகளிலும், அரசு கட்டிடங்கள், வணிக வளாகங்கள், சுங்கச்சாவடிகள் மற்றும் போலீஸ் நிலையங்களிலும் தேசியகொடி ஏற்றுவது சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தேசியக்கொடி தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதிப்படுத்தவும் சென்னை மாநகராட்சி சார்பில் வணிகர் நலச் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து, பூக்கடை, மார்க்கெட் மற்றும் பாண்டி பஜார் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தேசியக்கொடி தட்டுப்பாடின்றி கிடைக்கவும் உறுதி செய்யப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.
Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-corporation-announced-important-notification-for-3-day-national-flag-hoisting-470616.html