சென்னையில் மழை: அடுத்த 3 மணி நேரம்.. உஷார் மக்களே! – Tamil Samayam

சென்னைச் செய்திகள்

சென்னை உட்பட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தருமபுரி, கிருஷ்ணகிரி, தென்காசி, தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், வடபழனி, கோயம்பேடு, கிண்டி, வேளச்சேரி, மதுரவாயல், முகப்பேர் உள்ளிட்ட பகுதிகள் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.

சசிகலா சொன்ன டீல்: உடனே ஓகே சொன்ன டெல்லி – எடப்பாடிக்கு சிக்கல்!

சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “ ஆகஸ்ட் 29ஆம் தேதி (இன்று) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/in-tamil-nadu-11-districts-including-chennai-will-receive-rain-in-the-next-3-hours/articleshow/93843074.cms