இலவச ஆன்லைன்வழி தமிழ் வகுப்புகளை அறிமுகம் செய்த IIT மெட்ராஸ்..! – Tamil Samayam

சென்னைச் செய்திகள்

என்பிடெல் மற்றும் ஐஐடி மெட்ராஸ், தமிழில் இலவச ஆன்லைன் சீராக்கத் திட்டத்தை வழங்க மெட்ராஸ் டிஸ்லெக்சியா அசோசியேஷன் உடன் இணைந்து செயல்படுகிறது. மொழி அடிப்படையிலான செயலாக்கத்தில் கடினமான டிஸ்லெக்சியா, ஆங்கிலத்தில் மட்டுமின்றி பிற மொழிகளிலும் செயல்படுத்துவது சிரமமாக உள்ள சூழ்நிலையில், தமிழ்வழியில் படிக்கும் குழந்தைகளுக்கு ஆதரவை வழங்கும் வகையில் ‘தமிழ் வழிப் பயிற்சித் திட்டத்தை எம்டிஏ வடிவமைத்து மேம்படுத்தி உள்ளது.

இது குறித்து சென்னை IIT வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., “தேசிய தொழில்நுட்ப மேம்பாடு கற்றல் திட்டம் ஐஐடி மெட்ராஸ், தமிழ்வழியில் கல்வி பயிலும் கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான சீராக்கத் திட்டத்தை மெட்ராஸ் டிஸ்லெக்சியா அசோசியேஷன் – உடன் (MDA) இணைந்து அளிக்கிறது. என்பிடெல் மூலம் எவ்வித கட்டணமும் இன்றி முற்றிலும் இலவசமாக ஆன்லைன் வழியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

டிஸ்லெக்சியா எனப்படும் கற்றல் குறைபாடு காரணமாக சிரமப்படும் குழந்தைகளைத் தொடக்க நிலையிலேயே சரியான நேரத்தில் கண்டறிந்து, அவர்களுக்கான தேவைகளின் அடிப்படையில் உரிய தீர்வுகளை வழங்கினால், ஆக்கப்பூர்வமான இளைஞர்களாக அவர்களை உருவாக்க முடியும். மொழி அடிப்படையிலான செயலாக்கத்தில் கடினமான டிஸ்லெக்சியா, ஆங்கிலத்தில் மட்டுமின்றி பிற மொழிகளிலும் நடைமுறைப்படுத்துவது சிரமமாகவே இருந்து வருகிறது.

எனவே, தமிழ்வழி தொடக்கப் பள்ளிகளில் படித்துவரும் டிஸ்லெக்சியா-வால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை அடையாளம் காணவும், தீர்வு வழங்கவும் எம்டிஏ ‘தமிழ் வழிப் பயிற்சி யை வடிவமைத்து மேம்படுத்தி உள்ளது.
‘தமிழ் வழிப் பயிற்சி’த் திட்டத்தை ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, மெட்ராஸ் டிஸ்லெக்சியா அசோசியேஷன் (MON) தலைவர் திரு.டி. சந்திரசேகர் ஆகியோர் வெள்ளிக்கிழமை (2 செப்டம்பர் 2022) தொடங்கி வைத்தார்கள்.

ஐஐடி மெட்ராஸ் டீன் (முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் உறவுகள்) பேராசிரியர் மகேஷ் பஞ்சகநுலா, என்பிடெல்-ஐஐடி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஆண்ட்ரூ தங்கராஜ். பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தி, பேராசிரியர் ஆர்.நாகராஜன் மற்றும் இதில் தொடர்பு உடையவர்கள் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய ஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, “பரந்த சமுதாயத்திற்கு ஐடி மெட்ராஸ்-ன் தொடர்பு குறித்த கேள்விக்கு இந்த முன்முயற்சி சக்திவாய்ந்த ஒரு பதிலாக இருக்கும். என்பிடெல் மூலமாக இந்த கல்வி நிறுவனம் தொழில் நுட்ப உதவியை வழங்குவது மட்டுமின்றி, அதன் முன்னாள் மாணவர்கள் (திரு.சந்திரசேகர்) தலைமையில் இந்த முன்முயற்சியை மேற்கொண்டு உள்ளது. ஏஐ4பாரத-ல் உருவாக்கப்பட்டு உள்ளதைப் போன்று செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர மொழி அடிப்படையில் பிற மொழிகளிலும் இந்த முன்முயற்சியை மேற்கொள்ள வேண்டும். பல்வேறு மொழிகளிலும் இதனை கிடைக்கச் செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்….

‘தமிழ் வழிப் பயிற்சியின் தாக்கம் குறித்து எடுத்துரைத்த, சென்னை டிஸ்லெக்சியா அசோசியேஷன் (May) தலைவர் திரு. டிசந்திரசேகர் கூறும்போது, “புள்ளிவிவரப்படி, 10 முதல் 15 விழுக்காடு அளவுக்கு குழந்தைகள் டிஸ்லெக்சியாவின் தாக்கம் காரணமாக பாதிக்கப்படுகின்றனர். பள்ளிகளில் தமிழ் வழியில் கல்வி பயிலும் குழந்தைகளை அதிக எண்ணிக்கையில் பரிசோதனை செய்வதும், அதனை மதிப்பீடு செய்து அதற்குரிய சீராக்கத்தை மேற்கொள்வதும் அவசியமாகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள இதுபோன்ற பள்ளிகளில் முன்கூட்டியே கண்டறிந்து சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிவகுக்கும்” என்றார்.

பள்ளி மட்டத்திலேயே இதனைப் புரிந்து கொண்டு அதிகபட்ச முக்கியத்துவம் அளித்து சரிசெய்ய வேண்டியது அவசியம். அக்கறை கொண்ட பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த ஒட்டுமொத்த செயல்முறையில் முக்கிய பங்களிப்பு உண்டு. டிஸ்லெக்சியாவின் அடிப்படைகள், வகுப்பறைகளுக்குள் டிஸ்லெக்சியா உள்ள குழந்தைகளுக்கு எவ்வாறு அதனை செயல்படுத்துவது என்பதற்கான அடிப்படை நிலைப்பாடுகள் போன்றவற்றை மெட்ராஸ் டிஸ்லெக்சியா அசோசியேஷன் ஆசிரியர்களுக்கு வெற்றிகரமாக பயிற்சி அளித்து வருகிறது.

சீராக்கக் கற்றல் முறை என்பது பிரத்யேக கல்வி முறைகளைக் கொண்டு கற்பிக்கப்படும் கட்டமைக்கப்பட்ட பல்வகைத் திட்டமாகும். குழந்தைகளின் தேவைகள் மற்றும் சிரமங்களைப் புரிந்து அதனை சமாளிப்பதற்கான உத்திகளை இத்திட்டம் வழங்குகிறது. மெட்ராஸ் டிஸ்லெக்சியா அசோசியேஷனைப் பொறுத்தவரை ஆர்டன்-கில்லிங்ஹாம் என்ற அடிப்படையைக் கொண்ட சீராக்கப் பயிற்சி முறையை செயல்படுத்துவதுடன், பல்வகை நுண்ணறிவு அணுகுமுறைகளை தடை ஏதுமின்றி ஒருங்கிணைத்து வருகிறது.

இதுபோன்ற குழந்தைகளுக்குத் தேவையான சீராக்கத்தை வழங்கும் வகையில்தான், ‘தமிழ் வழிப் பயிற்சி’ என்ற முழுமையான தொகுப்பை எம்.டி.ஏ. வடிவமைத்து மேம்படுத்தி உள்ளது. தமிழ் வழிக் கல்வி நடைபெறும்
புகளில் பரிசோதனைக் கருவி மற்றும் டிஸ்லெக்சியா உள்ள குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் கற்பிக்கக் கூடிய உத்திகள் மற்றும் பயிற்சித் திட்டங்கள் ஆகியவற்றை இந்தத் தொகுப்பு உள்ளடக்கியதாகும்.

‘தமிழ் வழிப் பயிற்சியின் தனித்துவ அம்சங்கள் வருமாறு:

> டிஸ்லெக்சியா, குழந்தை வளர்ச்சி, பரிசோதனை, வாசித்தல், சொற்கள் உச்சரிப்பு, எழுதுதல், கணிதம், படிக்கும் திறன், பல்வகை நுண்ணறிவுகள் பற்றிய அடிப்படைத் தொகுதிகள் என அனைத்தையும் உள்ளடக்கியது.
> சுய-வேகம், ஆன்லைன்
> தொகுதிகள், சிறு பகுதிகளாகப் பிரித்தல்
> ஒவ்வொரு தொகுப்புக்கும் வீடியோக்கள்
> பயனுள்ள கற்றலுக்கு உதவும் தொகுதி – முடிவு குறுகிய வினாடி வினா
> பகுப்பாய்வு மற்றும் வினாடி வினாவுடன் 7 பரிசோதனை ஆய்வுகள்

ஐஐடி மெட்ராஸ் – ஓர் அறிமுகம் இந்திய தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸ் 1959-ம் ஆண்டில் இந்திய அரசால் ‘தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவன’மாகத் தொடங்கப்பட்டது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 16 கல்வித் துறைகள் மற்றும் மேம்பட்ட இடைநிலை ஆராய்ச்சிக் கல்வி மையங்கள் மூலம் இக்கல்வி நிறுவனத்தின் செயல்பாடுகள்

மேற்கொள்ளப்படுகின்றன. இக்கல்வி நிறுவனம் பி.டெக்., எம்.எஸ்சி., எம்.பி.ஏ., எம்.டெக்., எம்.எஸ்., பிஎச்.டி., போன்ற வெவ்வேறு பிரிவுகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டங்களை வழங்குகிறது. ஐஐடிஎம் 600-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், 9,500 மாணவர்களுடன் இயங்கும் உண்டு உறைவிடக் கல்வி நிறுவனமாகும். இங்கு 18 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். வலுவான பாடத்திட்டங்கள் மற்றும் ‘ஐஐடிஎம் இன்குபேஷன் செல்’ ஆகியவற்றின் மூலம், ஐஐடிஎம் தொழில் முனைவுக்கு ஊக்கமளித்து வருகிறது.

2019-ம் ஆண்டில் இன்ஸ்டிடியூட் ஆஃப் எமினன்ஸ் கல்வி நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்ட ஐஐடிஎம், இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தேசியக் கல்வி நிறுவன தரவரிசைப் பட்டியலில் ‘ஒட்டுமொத்தப் பிரிவில் தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக அகில இந்திய அளவில் முதலிடத்தைத் தக்க வைத்துள்ளது. இதே தரவரிசைப் பட்டியலில் ‘பொறியியல் கல்வி நிறுவனங்கள்’ பிரிவிலும் 2016 முதல் 2022 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக ஏழு ஆண்டுகளாக இக்கல்வி நிறுவனம் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது. புதுமைக் கண்டுபிடிப்பில் சாதனை படைத்த கல்வி நிறுவனங்களுக்கான அடல் தரவரிசையில் (ARI TA) ‘சிறந்த புத்தாக்க கல்வி நிறுவன’மாக 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் அறிவிக்கப்பட்டது.

Source: https://tamil.samayam.com/education/news/iit-madras-introduced-free-online-tamil-classes/articleshow/93967618.cms