சென்னையில் நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தம் – சென்னை குடிநீர் வாரியம் தகவல் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை

சென்னை:

வளசரவாக்கம், ராமகிருஷ்ணா நகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் 400 மி.மீ. விட்டமுள்ள உந்து குழாயுடன் ஆற்காலை சாலை மற்றும் காமராஜர் சாலை சந்திப்பில் அமைந்துள்ள 1200 மி.மீ. விட்டமுள்ள பிரதான குழாயினை இணைக்கும் பணிகள் 17-ந்தேதி (நாளை) காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனால் சென்னை பகுதி 10-க்குட்பட்ட எம்.ஜி.ஆர்.நகர், கே.கே.நகர், நெசப்பாக்கம், ஜாபர்கான்பேட்டை, சைதாப்பேட்டை பகுதியில் ஜோன்ஸ் ரோடு வரை மற்றும் பகுதி 11-க்குட்பட்ட ராமாபுரம், வளசரவாக்கம், மதுரவாயல், தாய்சா குடியிருப்பு, கே.கே.நகர் மற்றும் சூளைமேடு குடிநீர் பகிர்மான நிலையத்துக்குட்பட்ட பகுதிகளுக்கு குழாயின் மூலமாக வழங்கும் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

பொது மக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள பகுதி-10 பொறியாளரை 8144930910, பகுதி-11 பொறியாளரை 8144930911 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மேற்கண்ட தகவல் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


Related Tags :

Source: https://www.dailythanthi.com/News/State/water-supply-to-stop-tomorrow-in-chennai-793598