சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு..! பொதுமக்களுக்கு மாநகராட்சி எச்சரிக்கை – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி கவனமாக இருக்க சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்த நிலையில், தற்போது மீண்டும் கொரோனா தினசரி பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. மேலும் பண்டிகை காலம் நெருங்குவதால் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் தொற்று பரவாமல் தடுக்க மக்கள் பொது இடங்களில் கட்டாயமாக முகக்கவசம் அணியவும் சமூக இடைவெளியை பின்பற்றவும், கோவிட் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.மேலும் சளி, காய்ச்சல் இருப்பின் சுயசிகிச்சை மேற்கொள்ளாமல் மருத்துவர்களை அணுகவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Also Read: தமிழகத்தில் 282 பேருக்கு H1N1 காய்ச்சல் பாதிப்பு- அமைச்சர் மா.சு

இந்த நிலையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை 1,10,34,921 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், 97.69% முதல் தவணை தடுப்பூசியும், 86.62% இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

தற்போது வரை 6,02,998 முன்னெச்செரிக்கை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் இதுவரை 37 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் 43,97,550 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உங்கள் நகரத்திலிருந்து(சென்னை)

சென்னை

சென்னை

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source: https://tamil.news18.com/news/chennai/corona-virus-highly-spread-in-chennai-802767.html