சென்னை: குழந்தை பிறந்த மகிழ்ச்சியைக் கொண்டாட முடியாத குடும்பம்! – தீயில் கருகி பலியான தொழிலதிபர் – Vikatan

சென்னைச் செய்திகள்

சென்னை சூளைமேடு, இளங்கோவடிகள் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் கட்டுமான நிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிலையில் சுரேஷ்குமாரின் மகனுக்கு பெண் குழந்தை பிறந்தது. அதனால் சுரேஷ்குமாரின் குடும்பம் மகிழ்ச்சியில் திளைத்தது. மருத்துவமனைக்குச் சென்று பேத்தியைப் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்த சுரேஷ்குமார், தன்னுடைய நண்பர்கள், உறவினர்களுக்கு தகவலைத் தெரிவித்தார். அதன்பிறகு வீட்டில் தன்னுடைய அறைக்குச் சென்று சுரேஷ்குமார் தூங்கினார்.

இந்த நிலையில், சுரேஷ்குமாரின் வீட்டிலிருந்து இன்று (15.12.2022) காலை புகை வந்ததது. அதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், தீயணைப்பு நிலையத்துக்கும், சூளைமேடு காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், சுரேஷ்குமாரின் படுக்கையறைக்குச் சென்றனர். அங்கு அவர் கருகிய நிலையில் சடலமாக கிடந்தார். அந்த அறையில் மது பாட்டில்களும் சிகரெட் துண்டுகளும் கிடந்தன. இதையடுத்து சூளைமேடு போலீஸார், தொழிலதிபர் சுரேஷ்குமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMibWh0dHBzOi8vd3d3LnZpa2F0YW4uY29tL25ld3MvY3JpbWUvYnVzaW5lc3NtYW4tc3VzcGljaW91c2x5LWRpZWQtaW4taGlzLWJlZC1yb29tLXBvbGljZS1pbnZlc3RpZ2F0aW9uLWdvZXMtb27SAXdodHRwczovL3d3dy52aWthdGFuLmNvbS9hbXAvc3RvcnkvbmV3cy9jcmltZS9idXNpbmVzc21hbi1zdXNwaWNpb3VzbHktZGllZC1pbi1oaXMtYmVkLXJvb20tcG9saWNlLWludmVzdGlnYXRpb24tZ29lcy1vbg?oc=5