அடையாறில் அமைச்சர் கார் மீது மற்றொரு கார் மோதி விபத்து – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், நேற்று காலை, சென்னை அடையாறு திருவிக பாலம் வழியாக காரில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில்,  அவரது காருக்கு பின்னால்,  மற்றொரு கார் வேகமாக வந்து கொண்டிருந்தது. திடீரென அந்த கார், அமைச்சர் காரின் பின்பகுதியில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், இரு கார்களும் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக  யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தகவலறிந்து அடையார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விபத்தில் சிக்கிய கார்களை அப்புறப்படுத்தினர்.
மேலும், இதுதொடர்பாக, வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில், விபத்தை ஏற்படுத்தியது கர்நாடகாவை சேர்ந்த பாலாஜி என தெரியவந்துள்ளது. இதுகுறித்து,  தொடர்ந்து கார் ஓட்டி வந்த பாலாஜியை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MjczMTXSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgyNzMxNS9hbXA?oc=5