6 நாள் தொடர் போராட்டம் முடிவுக்கு வந்தது : உண்ணாவிரத்தை வாபஸ் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள்! – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்

6 நாட்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இடை நிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் பெற்றுள்ளனர்.

சமவேளைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 26 ந்தேதி முதல் பேராசியர் அன்பழகன் வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

31/5/2009ம் ஆண்டுக்கு முன்னர் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு உள்ள ஊதியத்தை, 1 .6 2009க்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர். முன்னதாக தொடக்கக் கல்வித் துறை இயக்குனர் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகியோருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

உங்கள் நகரத்திலிருந்து(சென்னை)

சென்னை

சென்னை

இந்த நிலையில் இன்று தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து அறிய நிதித்துறை செயலாளர் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் தொடக்கக்கல்வித்துறை இயக்குனர் ஆகியோரை அடங்கிய குழு அமைக்கப்படும் என அறிவித்திருந்தது. இதனை அடுத்து தற்போது போராட்டத்தை இடைநிலை ஆசிரியர்கள் வாபஸ் பெற்றுள்ளனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMicmh0dHBzOi8vdGFtaWwubmV3czE4LmNvbS9uZXdzL2NoZW5uYWkvdGVhY2hlcnMtaHVuZ2VyLXByb3Rlc3QtaGFzLWJlZW4tY2FsbGVkLW9mZi1hZnRlci10aGUtY29tbWlzc2lvbi04NjU5MTMuaHRtbNIBdmh0dHBzOi8vdGFtaWwubmV3czE4LmNvbS9hbXAvbmV3cy9jaGVubmFpL3RlYWNoZXJzLWh1bmdlci1wcm90ZXN0LWhhcy1iZWVuLWNhbGxlZC1vZmYtYWZ0ZXItdGhlLWNvbW1pc3Npb24tODY1OTEzLmh0bWw?oc=5