சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரிப்பு – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை,

சென்னை: தங்கம் விலை கடந்த 10 நாட்களாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 31-ந்தேதி தங்கம் விலை பவுன் ரூ.41 ஆயிரத்தை தாண்டியது. அதன்பிறகும் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று 1 பவுன் தங்கம் ரூ.41,528-க்கு விற்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு மேலும் ரூ.136 அதிகரித்து ரூ.41,664-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று கிராமுக்கு ரூ.17 அதிகரித்து ரூ.5208-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே நேரத்தில் வெள்ளி விலை இன்று குறைந்து உள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.75.50-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 50 காசு குறைந்து ரூ.75-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.75 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.


Related Tags :

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiZmh0dHBzOi8vd3d3LmRhaWx5dGhhbnRoaS5jb20vTmV3cy9TdGF0ZS9qZXdlbGVyeS1wcmljZS1pbi1jaGVubmFpLWluY3JlYXNlZC1ieS1ycy0xMzYtcGVyLXNhd2FuLTg3MTg3NtIBamh0dHBzOi8vd3d3LmRhaWx5dGhhbnRoaS5jb20vYW1wL05ld3MvU3RhdGUvamV3ZWxlcnktcHJpY2UtaW4tY2hlbm5haS1pbmNyZWFzZWQtYnktcnMtMTM2LXBlci1zYXdhbi04NzE4NzY?oc=5