வானிலை அலெர்ட்! அடுத்த 4 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் மழை! – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்

தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்களில் வரும் 27ம் தேதி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும் டெல்டா மாவட்டங்களிலும் செவ்வாய்கிழமை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் எனக் கூறியுள்ள வானிலை மையம், குமரிக்கடல் பகுதிகளில் வடகிழக்கு திசையிலிருந்து பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனக் கணித்துள்ளது. இதனால், அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMicGh0dHBzOi8vdGFtaWwubmV3czE4LmNvbS9uZXdzL3RhbWlsLW5hZHUvdGFtaWxuYWR1LXJhaW4td2VhdGhlci11cGRhdGUtY2hlbm5haS1tZXQtZGVwYXJ0bWVudC11cGRhdGUtODc3MzUwLmh0bWzSAXRodHRwczovL3RhbWlsLm5ld3MxOC5jb20vYW1wL25ld3MvdGFtaWwtbmFkdS90YW1pbG5hZHUtcmFpbi13ZWF0aGVyLXVwZGF0ZS1jaGVubmFpLW1ldC1kZXBhcnRtZW50LXVwZGF0ZS04NzczNTAuaHRtbA?oc=5