MSME: சென்னை சிறு, குறு நிறுவனங்களிடையே செம டிமாண்ட்! – Tamil Samayam

சென்னைச் செய்திகள்
கொரோனா நெருக்கடி காலத்தில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த பாதிப்பில் இருந்து சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் படிப்படியாக மீண்டு வருவதற்கு முயற்சித்து வருகின்றன.

இந்நிலையில், சென்னை மற்றும் பெங்களூருவில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மத்தியில் கடனுக்கான டிமாண்ட் கொரோனா காலத்துக்கு முன்பிருந்த அளவை தாண்டி உயர்ந்துள்ளதாக NeoGrowth நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு ரிப்போர்ட் கூறுகிறது.

கொரோனா நெருக்கடி தணிந்தபின் போதிய ஆதரவுடன் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் வலுவாக மீண்டு வந்துள்ளதாகவும் இந்த ரிப்போர்ட் கூறுகிறது. கடந்த மார்ச் மாதம் மெட்ரோ அல்லாத நகரங்களிலும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மத்தியில் கடனுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளதாக இந்த அறிக்கை வாயிலாக தெரிகிறது.

36000 குடும்பங்கள் ஹேப்பி.. சென்னையில் வீடு வாங்கியோர் நிம்மதி!
கொரோனா பாதிப்பில் இருந்து வெளியே வருவதற்கு 46% சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு நிதியுதவி தேவைப்பட்டுள்ளது. இரண்டாம் அலை காலத்தில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தயார் நிலையில் இருந்ததாகவும், 30% நிறுவனங்களுக்கு மட்டுமே உதவி தேவைப்பட்டதாகவும் இந்த ரிப்போர்ட் கூறுகிறது.

சென்னை மற்றும் பெங்களூருவில் உள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மத்தியில் கடனுக்கான டிமாண்ட் கொரோனா நெருக்கடி காலத்துக்கு முன்பிருந்ததை விட அதிகரித்துள்ளது எனவும் இந்த அறிக்கை கூறுகிறது.

Source: https://tamil.samayam.com/business/business-news/chennai-and-bengaluru-msmes-credit-demand-surpassed-pre-covid-levels-according-to-report/articleshow/92199016.cms