சென்னை: அம்மாடியோவ்…மாதவரத்தில் பெரும் தீ விபத்து! – Samayam Tamil

சென்னைச் செய்திகள்
சென்னை: அம்மாடியோவ்…மாதவரத்தில் பெரும் தீ விபத்து!
சென்னை மாதவரம் ரவுண்டானா அருகில் மருந்து தயாரிக்க தேவையான மூலப்பொருள்கள் வைக்கப்படும் ரசாயன கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அதற்கு அருகில் இருந்த சுமார் 10க்கும் மேற்பட்ட கடைகளில் தீ பரவியுள்ளது. அந்த பகுதிக்கு மக்கள் வரவேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். ரசாயனங்கள் எரிவதால் கண்ணெரிச்சல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பெரும் தீவிபத்து தொடர்பாக மாதவரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தற்போது தீயை அணைக்கும் முயற்சியில் 20 தீயணைப்பு வாகனங்கள், குடிநீர் லாரிகள் ஈடுபட்டுள்ளன. ஆனால் தீயை கட்டுக்குள் கொண்டுவரமுடியவில்லை. வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

சில ரசாயனங்கள் மேல் தண்ணீர் பட்டால் மேலும் தீ அதிகளவில் கிளம்பும் என்பதால் நுரைகள் மூலமும் தீயை அணைக்க முயற்சித்து வருகின்றனர். அந்தப் பகுதியே கரும்புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

fire erupts at oil warehouse in madhavaram chennai

புகை மண்டலமான மாதவரம்: கொழுந்துவிட்டு எரியும் தீ!
Loading

வேலூர்: லஞ்சம் வாங்கிய தனி துணை ஆட்சியர் கைது!

இதுதொடர்பாக தீயணைப்புத் துறை டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களைச் சந்தித்தார். “மூன்று மணி நேரத்துக்கும் மேலாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். உள்ளே இருந்தவர்களை வெளியேற்றிவிட்டோம். மூன்று முக்கிய திசைகளில் இருந்து தீயை அணைத்து வருகிறோம். தற்போது 500 வீரர்கள் இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அடுத்த ஷிப்டில் மேலும் 500 பேர் களமிறங்க தயாராக உள்ளனர்.

தீ கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. தீ அணைவதாலேயே புகை அதிகமாக வெளிவருகிறது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தீயை அணைத்துவிடுவோம் என நம்புகிறோம். விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொள்வார்கள்” என்று தெரிவித்தார்.

Source: https://tamil.samayam.com/latest-news/chennai-news/big-fire-accident-in-madhavaram-chennai/articleshow/74417702.cms