அதிக ஆபத்து மிக்க நகரங்கள் பட்டியலில் சென்னை; இலங்கை அரசு அறிவிப்பு! – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
இலங்கை

  • Share this:
சென்னையில் இருந்து இலங்கை திரும்பிய 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து அதிக ஆபத்து மிக்க நகரங்களில் ஒன்றாக சென்னை இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இலங்கையில் இதுவரை 115 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில், சென்னையில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா பாதித்திருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.

ஏற்கனவே இந்த வார தொடக்கத்தில் சென்னையில் இருந்து வந்த இருவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த 14 நாட்களில் சென்னை சென்று திரும்பியவர்கள் தாங்களாகவே விபரங்களை தெரிவிக்கும்படி இலங்கை சுகாதார சேவைகள் இயக்குநர் வலியுறுத்தியுள்ளார்.

[embedded content]

 



சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube



First published: March 30, 2020

Source: https://tamil.news18.com/news/coronavirus-latest-news/chennai-very-dangerous-city-announced-srilanka-esr-273231.html