சென்னை ராயபுரத்தில் 158 பேருக்கு கொரோனா- மண்டல வாரியாக பாதிப்பு விவரம் – மாலை மலர்

சென்னைச் செய்திகள்

சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் கொரோனா வைரசுக்கு அதிக அளவாக 158 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை:

தமிழகத்தில் நேற்று 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1937 ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 47 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு 570 ஆக உயர்ந்துள்ளது. 5வது மண்டலமான ராயபுரம் மண்டலத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ராயபுரத்தில் நேற்று மட்டும் 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 158 ஆக உயர்ந்துள்ளது. 

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை வருமாறு:-

திருவொற்றியூர் – 15

மணலி -1

மாதவரம் – 3

தண்டையார்பேட்டை – 66

ராயபுரம் –  158

திரு.வி.க. நகர்- 94

அம்பத்தூர் – 15

அண்ணா நகர் – 53

தேனாம்பேட்டை – 56

கோடம்பாக்கம்- 54

வளசரவாக்கம் – 17

ஆலந்தூர் -9

அடையாறு – 17

பெருங்குடி – 9

சோழிங்கநல்லூர் – 2.

Related Tags :

Source: https://www.maalaimalar.com/news/state/2020/04/28083321/1468006/zone-wise-Covid19-positive-cases-in-Chennai.vpf