கொரோனா: சென்னையில் எங்கு, எவ்வளவு பாதிப்பு தெரியுமா? – Samayam Tamil

சென்னைச் செய்திகள்

தமிழ்நாட்டில் மிக அதிகளவில் பாதிக்கப்படும் மாவட்டமாகவும், பிற இடங்களுக்கு பரவ காரணமாக இருந்த மாவட்டமாகவும் சென்னை பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 7204 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த அளவில் பாதிக்கும் மேல் சென்னையில் மட்டும் பதிவாகியுள்ளது. அங்கு 3839 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 676 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் அங்கு 105 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அதற்கடுத்தபடியாக கோடம்பாக்கத்தில் 630 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவிக நகரில் இதுவரை 556 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். ஒரே நாளில் அங்கு 87 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா: சென்னையில் காலையிலேயே இருவர் பலி!

அதைத் தொடர்ந்து தேனாம்பேட்டையில் 412 பேர்,, வளசரவாக்கத்தில் 319 பேர், அண்ணா நகரில் 301 பேர், தண்டையார் பேட்டையில் 274 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். முதலில் பாதிப்பு குறைவாக இருந்த அம்பத்தூர் மண்டலத்தில் தற்போது 205 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அடையாறில் 140 பேருக்கும், திருவொற்றியூரில் 84 பேருக்கும், மணலியில் 42 பேருக்கும், மாதவரத்தில் 54 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஆலந்தூரில் 20 பேரும், பெருங்குடியில் 26 பேரும் சோழிங்கநல்லூரில் 25 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் 3839 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 743 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3050 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 28 பேர் உயிரிழந்துள்ளனர் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் இன்று காலை உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Source: https://tamil.samayam.com/latest-news/chennai-news/chennai-coronavirus-cases-in-zone-wise-break-up-today-may-11th/articleshow/75670115.cms