சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்களுக்கு மின்கட்டணம் செலுத்த கால அவகாசம்.. – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
கோப்புப் படம்

  • Share this:
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மின் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு மின்சார வாரியம் தனது மின் துண்டிப்பிற்கான உரிமையை விட்டுக் கொடுத்ததால் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே 2020 மாதத்திற்கான மின் கட்டணத்தை முறையே 03/2020, 04/2020, 05/2020 & 06/2020-ல் செலுத்தாமல் இருப்பின் அந்தக் கட்டணத்தை 15.07.2020-க்குள் செலுத்தலாம்.

Also see:

[embedded content]

உயர்மின் அழுத்த இணைப்புகள் 15.07.2020 வரை மின் துண்டிப்பு செய்யப்படமாட்டாது. ஊரடங்கு காலத்தில் உயர்மின் அழுத்த நுகர்வோர்கள் தங்களது மின் கட்டணத்தை RTGS இணையதள வழிமுறையைப் பயன்படுத்தியோ அவர்களைச் சார்ந்த மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்திலும் செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


First published: June 21, 2020

Source: https://tamil.news18.com/news/tamil-nadu/date-extended-to-pay-electricity-bill-in-chennai-riz-nan-307937.html