Lockdown: சென்னையில் ஆகஸ்ட் 31 வரை 144 தடை உத்தரவு – Samayam Tamil

சென்னைச் செய்திகள்
தமிழ்நாடு முழுக்க கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜூலை 31 வரை ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டது. தமிழ்நாடு முழுக்க அமலுக்கு வந்திருக்கும் இந்த ஊரடங்கின் போது பல்வேறு தளர்வுகளும் அமலில் உள்ளது. அதே சமயம், சில பகுதிகளில் (கிராமங்கள், நகராட்சிகள்) தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில், தலைநகர் சென்னையில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக சென்னை மாநகரக் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். இதன்படி, பொதுவெளிகளில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது என்ற விதிமுறை அமலுக்கு வருகிறது.

அதேசமயம் பேரிடர் மேலாண்மைச் சட்டமும் ஏற்கனவே அமலில் உள்ளதால், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் என்பன உள்ளிட்ட நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/chennai-commissioner-announced-crpc-144-implemented-in-chennai/articleshow/77300459.cms