சென்னை: `இனி உங்களுக்கு நல்ல காலம்தான்’- குறிசொன்ன சாமியார்; லட்சங்களைச் சுருட்டிய கும்பல் – Vikatan

சென்னைச் செய்திகள்

இதையடுத்து மோகன்தாஸ், ராணி, கார்த்திக் மோகன்ராஜ், பார்த்திபன் ஆகிய ஐந்து பேரை போலீஸார் கைதுசெய்தனர். இந்த வழக்கில் இன்னும் சிலரை போலீஸார் தேடிவருகின்றனர். இந்தக் கும்பல், சுமார் 30 லட்சம் ரூபாய்க்கு மேல் பணத்தை ஏமாற்றியது தெரியவந்திருக்கிறது. இந்த மோசடிக்குப் பின்னணியில் ஒரு பெண்ணும், திருச்சியைச் சேர்ந்த சாமியார் ஒருவரும் இருக்கும் ரகசியத் தகவல் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸாருக்குக் கிடைத்திருக்கிறது.

கார்த்திக்

இது குறித்து மத்திய குற்றப் பிரிவு உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “ராணியின் சகோதரருக்கு அறிமுகமான பெண் ஒருவர்தான், இந்த மோசடிக்கு மூளையாக இருந்திருக்கிறார். அந்தப் பெண்தான், `விசாகப்பட்டினத்தில் கப்பல் படையில் துப்பரவுப் பணி முதல் அதிகாரிகள் பணிகள் வரை காலியாக இருக்கின்றன. அந்தப் பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் அதிகாரயை எனக்குத் தெரியும். அதனால், பணம் கொடுத்தால் அவர் மூலம் வேலையை வாங்கி விடலாம். அதற்கு நமக்கும் கமிஷன் கிடைக்கும்’ என்று மோகன்தாஸிடமும் ராணியிடமும் ஆசை வார்த்தைகளைக் கூறியிருக்கிறார்.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-police-busts-job-racket-team-arrested-five