பின்னர், இருவரும் காரில் சென்றிருக்கிறார்கள். திருமழிசை பகுதியில் காரில் சென்றபோது காரை நிறுத்தும்படி கூறியிருக்கிறார் திவ்யா. பின்னர் முத்துவை காரைவிட்டு இறங்கும்படி திவ்யா சொல்லியிருக்கிறார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் இரண்டு பேர் முத்துவின் முகத்தில் மயக்க மருந்தைத் தெளித்திருக்கிறார்கள். அவர்களுக்கு திவ்யாவும் உதவி செய்திருக்கிறார். முத்து மயங்கியதும், அவரை காரில் வேலூருக்கு அழைத்துச் சென்று, அங்கு ஒரு வீட்டில் வைத்து தாக்கியிருக்கிறார்கள். அப்போது முத்து பெயரிலுள்ள சொத்துகளை எழுதித் தரும்படி அவர்கள் கேட்டிருக்கிறார்கள்.
`முத்துவைக் காணவில்லை’ என்று காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டதும் சுதாரித்துக்கொண்ட அந்தக் கும்பல், அவரை காரில் கொண்டு வந்து வண்டலூர் அருகே விட்டுவிட்டுச் சென்றிருக்கிறது. மீட்கப்பட்ட முத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். முத்து அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அவரைக் கடத்தியவர்களைத் தேடிவருகிறோம். சம்பவம் நடந்த இடம் புதுப்பேட்டை என்பதால் வழக்கை மாற்றுவது தொடர்பாக ஆலோசித்துவருகிறோம்” என்றனர்.
“முத்துவைக் கடத்தியவர்கள் சிக்கினால் மட்டுமே உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியவரும்’’ என்றார் போலீஸ் உயரதிகாரி ஒருவர்.
Source: https://www.vikatan.com/news/crime/my-wife-kidnapped-and-tortured-me-for-properties-alleges-chennai-businessman