சென்னை: `போலி கால் சென்டர் தம்பதி; போனில் மனைவி பேசுவார்!’ – போலீஸ் வளையத்தில் தி.மு.க பிரமுகர் – Vikatan

சென்னைச் செய்திகள்

புகாரின்பேரில் அடையாறு காவல் மாவட்ட சைபர் க்ரைம் எஸ்.ஐ-க்கள் ஜெயபாலாஜி, மகாராஜன், முதல்நிலைக் காவலர்கள் சதீஷ், இந்திராணிஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்தப் பெண் கூறிய இன்ஷூரன்ஸ் நிறுவனம் போலி என்பது தெரியவந்தது. அதனால் திட்டமிட்டே மோசடி நடந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்த சைபர் க்ரைம் போலீஸார், பணம் அனுப்பிய வங்கிக் கணக்கு விவரங்கள், செல்போன் நம்பர் ஆகியவற்றைக்கொண்டு அந்தப் பெண் யாரென்று கண்டறிந்தனர்.

போலீஸாரின் விசாரணையில் வேளச்சேரி சந்தோஷபுரம், மெயின்ரோடு என்ற முகவரியில் `பெரேக்கா சொல்யூஷன்ஸ்’ என்ற பெயரில் போலி கால் சென்டர் நடந்துவருவது தெரிந்தது. உடனடியாக துணை கமிஷனரின் ஸ்பெஷல் டீமிலுள்ள காவலர்கள் முகிலன், ஜானி விஜய், சதீஷ், சண்முகம், கிரி, சண்முகநாதன், லோகநாதன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். விசாரணையில் இன்ஷூரன்ஸ், சேவைக் கட்டணம், முன்பதிவுக் கட்டணம் என்ற பெயரில் மோசடி நடப்பது தெரியவந்தது.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-dmk-cadre-wife-in-fake-call-center-case