சென்னை: திருமணம் செய்து கொள்வதாக சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞர்! – போக்ஸோவில் கைது – Vikatan

சென்னைச் செய்திகள்

உடனடியாக அஜித்தின் செல்போன் சிக்னலை போலீஸார் ஆய்வு செய்தனர். அது மயிலம் பகுதியைக் காட்டியது. உடனடியாக போலீஸார் மயிலத்துக்குச் சென்றனர். அங்கிருந்த அஜித்தையும் சிறுமியையும் போலீஸார் அழைத்துக்கொண்டு சென்னை வந்தனர். சிறுமியிடம் போலீஸார் விசாரித்தபோது, அஜித், தன்னை காதலித்ததாகவும் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்றதாகவும் கூறினார்.

கைது
representational image

இதையடுத்து போலீஸார் அஜித்தைக் கைதுசெய்தனர். கொரோனா பரிசோதனைக்குப் பிறகு நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 16 வயது சிறுமியை அழைத்துச் சென்றதால் அஜித் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இது குறித்து போலீஸார் கூறுகையில், “ஒரே பகுதி என்பதால் அஜித்துக்கும் சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. நாளடைவில் அது காதலாக மலர்ந்திருக்கிறது. அஜித்தை நம்பி சிறுமி வீட்டைவிட்டு வெளியில் சென்றிருக்கிறார். சிறுமிக்கு கவுன்சலிங் அளித்து அவரைப் பெற்றோரிடம் ஒப்படைத்திருக்கிறோம்” என்றனர்.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-youth-in-pocso-act-3