சென்னை: தாயைத் தவறாகப் பேசிய நண்பன் – கண்களைக் குத்திக் காயப்படுத்திய டீ மாஸ்டர்! – Vikatan

சென்னைச் செய்திகள்

அசோக சக்ரவர்த்தி, பெரியபாண்டியன் தாய் குறித்துத் தவறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. அதனால், ஆத்திரமடைந்த பெரியபாண்டியன், மதுபாட்டிலை உடைத்து, அசோக சக்ரவர்த்தியின் கழுத்தில் குத்தியிருக்கிறார். அதன் பிறகும் அவருக்குக் கோபம் குறையாமல், அருகில் கிடந்த குச்சியை எடுத்து அசோக சக்ரவர்த்தியின் இரண்டு கண்களிலும் குத்தியிருக்கிறார். அதனால், வலி தாங்க முடியாமலும் கண் தெரியாமலும் அசோக சக்ரவர்த்தி கதறித் துடித்திருக்கிறார்.

மெரினா கடற்கரை

இதையடுத்து அங்கிருந்து சர்வீஸ் சாலைக்கு வந்த பெரியபாண்டியன், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தகவலைத் தெரிவித்திருக்கிறார். உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து மெரினா காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற மெரினா போலீஸார், அசோக சக்ரவர்த்தியை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அசோக சக்ரவர்த்தியின் கண்களில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதால், எழும்பூர் அரசு கண் மருத்துவமனை டாக்டர்கள் குழுவினருடன் அரசு மருத்துவர்கள் ஆலோசித்துவருகின்றனர். மேல் சிகிச்சைக்காக அசோக சக்ரவர்த்தி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார். எழும்பூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் பரிசோதித்த பிறகே அசோக சக்ரவர்த்திக்கு மீண்டும் பார்வை கிடைக்குமா என்பது தெரியவரும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பெரியபாண்டியனிடம் மெரினா போலீஸார் விசாரித்துவருகின்றனர். விசாரணைக்குப் பிறகு அவர் கைதுசெய்யப்படுவார் என போலீஸார் தெரிவித்தனர்.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-tea-master