சென்னை: இறப்பதற்கு முன் வீடியோ அனுப்பிய பட்டதாரி பெண்! – திருமணமான 5 மாதங்களுக்குள் சோகம் – Vikatan

சென்னைச் செய்திகள்

மேலும் தாலிச் செயினை அடகு வைத்து பணம் கொடு என்று தெரிவித்திருக்கிறார். இதனால் மீண்டும் காவல் நிலையத்தில் புகாரளித்தோம். அப்போது மகளின் மாமியார் விசாரணைக்கு வரவில்லை. எனது மருமகன் மட்டும் விசாரணைக்கு வந்தார். விசாரணையில் தனிக்குடித்தனம் செல்வதாகக் போலீஸாரிடம் மருமகன் கூறினார். இதையடுத்து எனது மகள் கே.கே.நகரில் தங்கியிருந்தார். 3.4.2021-ல் தனது கணவர் தன்னை அழைப்பதாக என்னிடம் கூறி விட்டு காலை 7.30 மணியளவில் திருமுல்லைவாயலுக்கு எனது மகள் சென்றாள். வீட்டுக்குச் சென்ற எனது மகளை அவளது கணவர் பாலமுருகனும் மாமியார் அம்சா ஆகிய இருவரும் சேர்ந்து அவளை வீட்டுக்குள் செல்ல விடாமல் அடித்திருக்கின்றனர்.

முதல் தகவல் அறிக்கை

அப்போது அவளது கணவர் உன்னுடன் வாழ எனக்குப்பிடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார். அதற்கு எனது மகள், கணவரிடம் கெஞ்சியிருக்கிறார். ஆனால் எனது மருமகன் ஒத்துக்கொள்ளவில்லை. இதையடுத்து எனது மகள் பிடிவாதமாக நான் உன்னுடன்தான் வாழ்வேன் என்று கூறி வீட்டுக்குள் சென்றிருக்கிறார். அப்போது அவரது மாமியார் வீட்டின் மின்இணைப்பை துண்டித்திருக்கிறார். இவர்களது கொடுமை தாங்க முடியாமல் முதல் மாடியில் உள்ள படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கிறார். இந்தத் தகவலை போலீஸார் எனக்கு இரவு 9 மணியளவில் போனில் கூறினார்கள். உடனே நான் வந்து பார்த்தபோது எனது மகள் இறந்தநிலையில் இருந்தார். எனது மகள் என்னுடைய போனுக்கு அவளின் இறப்பிற்கு காரணம் தனது கணவர், மாமியார்தான் என்று வீடியோ பேசி அனுப்பியிருக்கிறார். எனவே எனது மகளை கொடுமை செய்து அளளின் இறப்பிற்கு காரணமான கணவர் மற்றும் மாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்த், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார். திருமணமான 5 மாதங்களுக்குள் பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-lady-commits-suicide-in-thirumullaivoyal