இதுகுறித்து அதே பகுதியைச் சேர்ந்த யாகேஷ்வரன் என்பவர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் உதவி கமிஷனர் ஜான்விக்டர் தலைமையில் போலீஸார் பட்டா கத்தியால் கேக்கை வெட்டியவர்களைத் தேடி வந்தனர். விசாரணையில் கண்ணகிநகரைச் சேர்ந்த சுனில் (18), நவீன்குமார் என்கிற தொப்பை, அப்பு, தினேஷ், ராஜேஷ்,, கார்த்திக் என்கிற பீடி ஆகிய 6 பேர் எனத் தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை கைது செய்து கத்தியை பறிமுதல் செய்தனர். இவர்கள் மீது சட்டவிரோதமாக கூடியது. ஆயுதங்களை வைத்திருத்தல், நோய் பரப்புதல், அரசு உத்தரவை மீறுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குபதிவு செய்திருக்கின்றனர்.பட்டா கத்தியால் கேக் வெட்டிய சம்பவம் கண்ணகி நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Source: https://www.vikatan.com/news/crime/in-chennai-kannaki-nagar-6-youth-arrested-by-police