சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில், மதுரை முதல் தர்மபுரி மற்றும் காஞ்சிபுரம் வரை சுமார் 13 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை கேரளாவில் துவங்கி விட்ட நிலையிலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வறண்ட வானிலை நிலவுகிறது. கடுமையான புழுக்கத்தை மக்கள் உணர்கிறார்கள்.
இந்த நிலையில்தான் குழுகுழு தகவல் ஒன்றை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது.
“கிரீன் சிக்னல்.. ஸ்டாலினின் இன்னொரு சக்சஸ்.. மெகா விக்கெட்டை இழக்கும் அமமுக.. பலே அமைச்சர்!
13 மாவட்டங்களில் மழை
காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை , கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மதுரை, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி ஆகிய 13 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
9 மாவட்டங்களில் நாளை மழை
அது மட்டும் கிடையாது. நாளை 9 மாவட்டங்களில் கனமழை பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது. திண்டுக்கல், மதுரை , சிவகங்கை, விருதுநகர், சேலம், மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தேனி ஆகிய மாவட்டங்களில் நாளை இடி, மின்னலுடன் கன மழை பெய்யும் என்கிறது சென்னை வானிலை ஆய்வு மையம்.
மக்கள் மகிழ்ச்சி
கடுமையான வெப்பத்திற்கு இதமாக இந்த மழை இருக்கக் கூடும் என்பதால் இந்த மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம் எதிர்பார்த்த அளவுக்கு தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையவில்லை என்பதால் ஆறுகளில் பெருமளவுக்கு தண்ணீர் வரத்து இல்லை.
வட மாநிலங்கள் நிலைமை
டெல்லி உட்பட வடக்கு உள் மாநில பகுதிகளில் ஜூலை 7-ஆம் தேதிக்கு முன்பாக பருவமழை கால்வைக்க வாய்ப்பு கிடையாது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வட மாநிலங்களில் பெரும் பகுதிகளில் மக்கள் கடும் புழுக்கத்தில் அவதிப்பட்டு வருகிறார்கள்.
Source: https://tamil.oneindia.com/news/chennai/rain-will-lash-13-districts-in-tamil-nadu-on-today-says-chennai-meteorological-department-425700.html