லட்சத்தைக் கடந்த சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை! – தக்கவைத்துக்கொள்வது எப்படி? – Vikatan

சென்னைச் செய்திகள்

கடந்த ஆண்டு முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துவருகிறது. இந்தநிலையில், பெருநகர சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க, பெற்றோர்கள் மிகுந்த ஆர்வம்காட்டிவருகிறார்கள். சென்னை மாநகராட்சியில் மட்டும் 119 தொடக்கப் பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள், 38 உயர்நிலை மற்றும் 32 மேல்நிலைப் பள்ளிகள் என்று மொத்தம் 281 பள்ளிகள் செயல்பட்டுவருகின்றன. இந்தப் பள்ளிகளில் 90,000-க்கும் அதிகமான மாணவர்களும், கிட்டத்தட்ட 3,000 ஆசிரியர்களும் பணியாற்றிவருகின்றனர்.

பள்ளி மாணவர்கள்
மாதிரிப் படம்

சென்னை மாநகராட்சியிலுள்ள பள்ளி வகுப்பறைகளை ஸ்மார்ட் கிளாஸாக மாற்றும் பணி நடைபெற்றுவருகிறது. மேலும், பள்ளிகளின் அடிப்படைக் கட்டமைப்பை அதிகரிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அனைத்துப் பள்ளிகளிலும் கழிவறைகள், குடிநீர் வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அதுமட்டுமல்லாமல், இந்தப் பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலவழியில் கல்வி கற்பிக்கப்படுகிறது. பல்வேறு கட்டமைப்புகளை அதிகரித்தபோதிலும் மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைந்தே காணப்பட்டது.

Source: https://www.vikatan.com/government-and-politics/education/number-of-new-admissions-in-chennai-corporation-school-students-exceeding-1-lakh-how-to-retain