சென்னை மெரினா கடற்கரையில் படகு சவாரி தொடங்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் அறிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில்,
* சென்னை மெரினாவில் படகு சவாரி தொடங்கப்படும். ராயல் மெட்ராஸ் யாக்ட் உடன் இணைந்து படகு சவாரி தொடங்கப்படும்.
* முட்டுக்காடு படகு இல்லத்தில் மிதவை படகுடன் கூடிய உணவகம் அமைக்கப்படும்
* ராமேஸ்வரம் – கன்னியாகுமரி இடையே சொகுசு கப்பல் படகு சேவை தொடங்குவது பற்றி ஆய்வு செய்யப்படும்.
* தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் சுற்றுலா தலம் பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.
* ஜவ்வாது மலை பகுதி பல்வேறு வசதிகளுடன் கூடிய சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படும்.
*சென்னையில் பொங்கலுக்கு ஆண்டுதோறும் இணைய வழியில் பிரமாண்ட கலை விழா நடத்தப்படும்.
* கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை இரவில் கண்டுகளிக்கும்படி ஒளியூட்டப்படும்.
*கீழடி அகழ் வைப்பகத்திற்கு தேவையான 34 நிரந்த பணியிடங்கள் ரூ1.50 கோடியில் ஏற்படுத்தப்படும் என்றார்.
Source: https://www.dailythanthi.com/News/State/2021/09/04142509/Boating-at-the-Chennai-Marina.vpf