சென்னை: பராமரிப்புப் பணி காரணமாக இன்று சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம்.
நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு.. மின், குடிநீர் இணைப்புகள் தரப்படாது.. தமிழக அரசு திட்டவட்டம்
அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்றும், இந்த பணிகள் விரைவாக முடிவடைந்தால் முன்னதாக மின் தடை நீக்கப்படும் என்றும் மின்சார வாரியத்தின் மூலம் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அந்தவகையில், இன்று சென்னையில் மின்தடை ஏற்படபோகும் முக்கிய இடங்கள் என்னென்ன என்பதை அறிந்து கொள்வோம்.
தாம்பரம் பிரிவு; கோவிலம்பாக்கம் எஸ் கொளத்தூர் மெயின் ரோடு, சத்தியா நகர், காந்தி நகர், வாட்டர் கம்பெனி கே.பி.ஜி நகர், பிள்ளையார் கோயில் தெரு, பொன்னியம்மன் மெயின் ரோடு, சின்னப்பா நகர், விடுதலை நகர், ராஜம் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இன்று மாலை 4.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
எனவே மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் இதற்கான முன்னெச்சரிக்கையோடு தங்களது பணிகளை மேற்கொள்வதற்காக முன்னதாக மின்சார வாரியம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Source: https://tamil.oneindia.com/news/chennai/to-facilitate-maintenance-work-power-supply-will-be-suspended-important-areas-in-chennai-today-441875.html