சென்னை : சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை காணப்படுகிறது.
தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும், சில இடங்களிலும் கனமழையும், சில இடங்களில் மிகக் கனமழையும் பெய்து வருகிறது.
அன்புச்செழியன் உள்பட 5 சினிமா தயாரிப்பாளர்களுக்கு சொந்தமான வீடுகளில் 2வது நாளாக வருமான வரி சோதனை
வானிலை மையம் அறிவிப்பு
தமிழகத்தின் நிலவும் வளிமண்டல மேலெடுக்க சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் அதிகன மழை பெய்யும். தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில், மிக கன மழை பெய்யும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருச்சி, திருப்பத்துார், வேலுார் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.
சென்னையில் அதிகாலை மழை
இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் கணித்தபடி, சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கிண்டி, எழும்பூர், புரசைவாக்கம் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், அதேவேளை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை காணப்படுகிறது.
புறநகர் பகுதிகளிலும் மழை
சென்னை புறநகர் பகுதிகளான செங்குன்றம், புழல், மாதவரம், மணலி, கொளத்தூர், பூந்தமல்லி, போரூர், வளசரவாக்கம், திருவேற்காடு, அம்பத்தூர், ஆவடி மற்றும் திருவள்ளுர், மணவாளநகர், பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரபகுதிகளில் இன்று லேசான மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதலே லேசமான மழை பெய்து வருவதால், சாலை செல்லும் வாகன ஓட்டிகள் வாகனங்களை மெதுவாக இயக்கி வருகின்றனர். சில இடங்களில் சாலையில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டது.
Source: https://tamil.oneindia.com/news/chennai/rain-at-various-places-in-chennai-since-morning-469128.html