சென்னை: `தங்கை இப்படி வாழ்வது அவமானமாக இருந்தது’ – கொலை வழக்கில் கைதான அண்ணன் `பகீர்’ தகவல்! – Vikatan

சென்னைச் செய்திகள்

சென்னை, புழல் லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் சுதாசந்தர் (22). இவர் தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்தார். இந்த நிலையில் சுதா சந்தரும் அவருக்குத் தெரிந்த இளம்பெண் ஒருவரும், கடந்த 31.1.2023-ம் தேதி பைக்கில் விநாயகபுரம் பகுதியில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது பைக்கை வழிமறித்து, ஆட்டோவிலிருந்து இறங்கிய சிலர், கண்இமைக்கும் நேரத்தில் சுதாசந்தரை வெட்டிச் சாய்த்து விட்டு தப்பி ஓடினர்.

இந்தச் சம்பவத்தை பார்த்த இளம்பெண் அதிர்ச்சியில் உறைந்தார். பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக புழல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், சுதாசந்தரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் கொலை வழக்கு பதிவுசெய்து, இளம்பெண் அளித்த தகவலின்படி கொலைசெய்தவர்களைத் தேடிவந்தனர். கொளத்தூர் துணை கமிஷனர் ராஜாராம் மேற்பார்வையில் உதவி கமிஷனர் ஆதிமூலம், இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார் ஆட்டோவின் பதிவு நம்பர், சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு கடந்த சில தினங்களாக தேடிவந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் தேடப்பட்டவர்கள் பதுங்கியிருக்கும் ரகசிய தகவல் போலீஸாருக்கு கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீஸார், கொலைசெய்யப்பட்டவருடன் பைக்கில் சென்ற இளம்பெண்ணின் அண்ணன் ராபின் என்கிற பரத் (22), அவரின் சித்தப்பா உதய்ராஜ், இளம்பெண்ணின் உறவினர் சுஷ்மிதா, ஆட்டோ டிரைவர் கார்த்திக் ஆகிய நான்கு பேரை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் சுதாசந்தர் கொலைசெய்யப்பட்டதற்கான காரணம் தெரியவந்தது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiUmh0dHBzOi8vd3d3LnZpa2F0YW4uY29tL25ld3MvY3JpbWUvcG9saWNlLWFycmVzdGVkLWZvdXItaW4tYS15b3VuZ3N0ZXItbXVyZGVyLWNhc2XSAVxodHRwczovL3d3dy52aWthdGFuLmNvbS9hbXAvc3RvcnkvbmV3cy9jcmltZS9wb2xpY2UtYXJyZXN0ZWQtZm91ci1pbi1hLXlvdW5nc3Rlci1tdXJkZXItY2FzZQ?oc=5