ஐபிஎல் கிரிக்கெட் பயிற்சிக்காக சென்னை வந்தார் தோனி….! | Dhoni arrives in Chennai for IPL – Fans welcome at airport – நியூஸ்7 தமிழ்

சென்னைச் செய்திகள்

ஐபிஎல் தொடரின் பயிற்சிக்காக சென்னை வந்த தோனிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள், வரும் 29-ம் தேதி தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியிலேயே மும்பை இந்தியன்சுடன் ,சென்னை சூப்பர் கிங்க்ஸ் மோதுகிறது. 

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் விளையாடும் வீரர்கள், சென்னைக்கு வந்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை அணியின் கேப்டனான தோனி, நேற்று நள்ளிரவு சென்னை விமான நிலையம் வந்தார். தோனியின் வருகையை அறிந்த அவரது ரசிகர்கள், விமான நிலையத்தில் திரண்டனர். சிலர் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Every goose shall bump with First Day First Show feels! Just #StartTheWhistles! #HomeSweetDen 🦁💛 pic.twitter.com/DpQBIqahZe

2020 ஐபிஎல் போட்டிகள் மார்ச் 29ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான பயிற்சியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி மார்ச் 2ஆம் தேதி தொடங்கவுள்ளார்.

Source: https://ns7.tv/ta/tamil-news/sports-editors-pick/2/3/2020/dhoni-arrives-chennai-ipl-fans-welcome-airport