சென்னையில் அண்ணா மேம்பாலம் அருகே வெடிகுண்டு வீச்சு… பெரும் பரபரப்பு – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் அண்ணா மேம்பாலம் அருகே மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டை வீசி சென்றார். இந்த குண்டு வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

image

சென்னையில் அண்ணா மேம்பாலம் அருகே வெடிகுண்டு வீச்சு… பெரும் பரபரப்பு – வீடியோ

சென்னையில் மிகவும் முக்கியமான பகுதியான போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள அண்ணா மேம்பாலம் அருகே மர்ம பொருள் வெடித்து சிதறியதால் பொதுமக்கள்அதிர்ச்சி அடைந்தனர்.

சென்னை அண்ணா சாலையில் காமராஜர் அரங்கத்திற்கு அருகே மாலை சுமார் 4.30 மணி அளவில் மர்ம பொருள் பலத்த சத்தத்துடன் வெடித்திருக்கிறது. இந்த வெடிச்சத்தத்தின் காரணமாக அருகில் இருந்த கார் கண்ணாடிகள் உடைந்திருக்கின்றன.

இவ்வளவு பெரிய சத்தத்துடன் என்ன வெடிக்கிறது என அருகில் உள்ள கடைகளில் உள்ள நபர்கள் எட்டிப்பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். இந்நிலையில் தேனாம்பேட்டை காவல்நிலையத்திற்கு 10 அடி தொலைவில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. போலீசார் உடனடியாக வந்து சோதனை நடத்தியதில் அது நாட்டு வெடிகுண்டு என்றும் கண்டுபிடித்துள்ளனர்.

அண்ணா மேம்பாலத்தின் மேலிருந்து அடுத்தடுத்து 2 வெடிகுண்டுகளை மர்ம நபர் வீசிவிட்டு தப்பி ஓடி உள்ளார். இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த செயலை செய்தவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-anna-bridge-bomb-blast-unidentified-men-thrown-country-bomb-378685.html