10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை சென்னையில், ஆட்டோ டிரைவர் கைது – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை திருவல்லிக்கேணியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
கொடுத்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை, 

சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர் ரவி (வயது 36). ஆட்டோ டிரைவரான இவர் மீது சென்னை திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு கொடுக்கப்பட்டது. அந்த புகார் மனுவில், அதே பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, ரவி அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து துன்புறுத்தியதாகவும், அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த புகார் மனு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க, துணை கமிஷனர் ஜெயலட்சுமி உத்தரவிட்டார். அதன்பேரில் திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். ஆட்டோ டிரைவர் ரவி கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Source: https://www.dailythanthi.com/News/Districts/2020/03/11010015/Auto-driver-arrested-in-Chennai.vpf