கும்மிடிப்பூண்டியில் கல்லூரி மாணவர்களை தாக்குவதற்கு கத்தியுடன் மின்சார ரெயிலில் வந்த மாணவரை போலீசார் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி:
சூலூர்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை செல்லும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் வந்தது.
அப்போது ரெயிலின் பின்னால் உள்ள பெண்கள் பெட்டிக்கு அருகில் உள்ள ரெயில் பெட்டியில் கல்லூரி மாணவர்கள் சிலர் சந்தேகத்திற்கிடமாக இருந்தனர்.
அவர்களை ரெயில்வே போலீசார் சோதனை செய்தபோது ஒரு மாணவர் பட்டாக்கத்தியுடன் இருப்பது தெரிந்தது. விசாரணையில் அவர் சென்னை மாநில கல்லூரியில் பி.எஸ்.சி. இயற்பியல் முதலாம் ஆண்டு படித்து வரும் சுமந்த் என்பது தெரிந்தது.
அவர் நண்பர்களுடன் சேர்ந்து மற்ற கல்லூரி மாணவர்களை தாக்குவதற்கு கத்தியுடன் வந்ததாக தெரிவித்தார். இதையடுத்து மாணவர் சுமந்தை போலீசார் கைது செய்து பட்டா கத்தியை பறிமுதல்செய்தனர்.
கைதான சுமந்தை பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Source: https://www.maalaimalar.com/news/district/2020/03/13130353/1320832/Chennai-college-student-arrested.vpf