சென்னை: நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் நாட்டில் COVID -19 தொற்றால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ள மாநிலங்களில் தமிழ் நாடும் (Tamil Nadu) ஒன்றாகும். தமிழகத்தை பொறுத்த வரை சென்னையில் (Chennai) தான் COVID -19 தொற்றின் தீவிரம் அதிகமாக உள்ளது. தமிழக அரசும் தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நேற்றைய நிலவரப்படி, சென்னையில் (Chennai) மட்டும் 510 பேருக்கு COVID -19 நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. மொத்தம் சென்னையில் 4882* பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. அதில் குணம் அடைந்தவர்கள் 814 பேர் மற்றும் இறந்தவர்கள் 38 பேர் ஆவார்கள். தற்போது (மே 12) செயலில் உள்ளவர்கள் 4012. அவர்களை தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.
சென்னையில் மண்டல வாரியாக கொரோனா வைரஸ் தொற்று நிலவரம் குறித்து சென்னை மாநகராட்சி பட்டியலை வெளியிட்டுள்ளது. மே 13-ம் தேதி காலை 8 மணி நிலவரப்படி, அதன் விவரங்களை பார்ப்போம்.
மே 13-ம் தேதி காலை 8 மணி நிலவரம்:
கொரோனா மூலம் இறந்தவர்கள் பட்டியல்:
கொரோனா நோய் தொற்று நிலவரம்:
Source: https://zeenews.india.com/tamil/tamil-nadu/zone-wise-detais-of-covid-19-positive-cases-in-chennai-on-may-12-334909