சென்னை கொரோனா அப்டேட்: 3 மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை 1000-ஐ தாண்டியது! – NDTV Tamil

சென்னைச் செய்திகள்

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3,062 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • சென்னையிலேயே ராயபுரம் மண்டலம்தான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது
  • ஆலந்தூர் மண்டலத்தில் மிகக் குறைவான கொரோனா பாதிப்பு
  • சென்னையில் இதுவரை கொரோனாவால் 64 பேர் உயிரிழந்துள்ளனர்

தமிழகத்தில் நேற்று 776 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 567 பேர். ஒட்டுமொத்த அளவில் 13,967 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 400 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 6,282 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால், தற்போது தமிழகத்தில் 7,588 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 7 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 94 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

சென்னையில் மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம் (21.05.2020) வருமாறு:

திருவொற்றியூர் – 228

மணலி – 115

மாதவரம் – 186

தண்டையார்ப்பேட்டை – 823

ராயபுரம் – 1,699

திரு.வி.க நகர் – 1,032

அம்பத்தூர் – 376

அண்ணா நகர் – 719

தேனாம்பேட்டை – 926

கோடம்பாக்கம் – 1,231

வளசரவாக்கம் – 605

ஆலந்தூர் – 96

 அடையாறு – 472

பெருங்குடி – 112

சோழிங்கநல்லூர் – 130

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை – 45

மே 22 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 8,795 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3,062 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 64 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 5,624 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

சென்னையிலேயே அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 1,699 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கோடம்பாக்கம் மண்டலத்திலும், திரு.வி.க நகர் மண்டலத்திலும் முறையே 1,231 மற்றும் 1,032 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆலந்தூர் மண்டலத்தில் மிகக் குறைவாக 96 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 
 

Source: https://www.ndtv.com/tamil/here-is-the-zone-wise-breakup-of-covid-19-positive-cases-in-chennai-on-may-22-2020-2233215