இதனால் சிவப்பிரகாஷ் தனது மகன் ரத்தினத்துடன் வீட்டில் இருந்தார். மனைவி, பிள்ளைகள் பேசாமல் இருந்ததால் வருத்தத்தில் இருந்த சிவபிரகாஷ், தனது படுக்கை அறையில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சிவபிரகாஷின் அறைக்கதவு நீண்டநேரமாகத் திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவரின் மகன், கதவைத் தட்டியிருக்கிறார். ஆனால் பதில் வரவில்லை. இதையடுத்து ரத்தினம், தன்னுடைய பெரியப்பா குமாருக்கு போனில் தகவல் தெரிவித்திருக்கிறார்.
பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சிவப்பிரகாஷ் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்திருக்கிறார். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்களும் அவரின் மகனும், சிவப்பிரகாஷை மீட்டு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், சிவபிரகாஷ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
Source: https://www.vikatan.com/news/crime/chennai-financier-commits-suicide-over-family-problem