சென்னை: `பூட்டிய அறைக்குள் சித்ரவதை; முகத்தில் தையல்!’ – வட்டி கொடுக்காததால் கொடூரக் கொலை – Vikatan

சென்னைச் செய்திகள்

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வண்ணாரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். ஜெகனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜெகனின் மரணம் குறித்து போலஸார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “மயான ஊழியரான ஜெகன், தனக்கு தெரிந்தவர்களிடம் கடன் வாங்கியுள்ளார். வாங்கிய பணத்தையும் அதற்குரிய வட்டியையும் கொடுக்காமல் இருந்துள்ளார். அதனால், கடன் கொடுத்தவர்கள், ஜெகனை அடித்துக் கொலை செய்துள்ளனர். அதுதொடர்பாக விசாரித்து வருகிறோம்” என்றனர்.

கதறி அழும் ஜெகனின் உறவினர்கள்

ஜெகனின் உறவினர்கள் கூறுகையில், “ஜெகனின் முகத்தில் வெட்டி, அதை துணி தைக்கும் ஊசியால் தைத்துள்ளனர். அந்தளவுக்கு கடன் கொடுத்தவர்கள் ஜெகனைக் கொடுமைப்படுத்தியுள்ளனர். சில மாதங்களுக்கு முன் ஜெகனிடம் மகளின் திருமணத்துக்காக வங்கியில் கடன் வாங்கச் சொல்லி, அந்தப் பணத்தையும் கடன் கொடுத்தவர்கள் அபகரித்துள்ளனர். அதன்பிறகும் பணம் கேட்டு தொல்லைக் கொடுத்து தற்போது கொலையே செய்துவிட்டனர். வாங்கிய கடனுக்கு மேல் வட்டியே கொடுத்துவிட்டோம். ஆனாலும், கடன் கேட்டு ஜெகனுக்கு தொல்லைக் கொடுத்துவந்தனர்.

ஜெகனுக்கு கடன் கொடுத்த சசி, சூர்யா, வடிவேலு, சித்ரா மற்றும் சிலர் சேர்ந்துதான் அவரைக் கடுமையாகத் தாக்கியதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்களிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஜெகன் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும்” என்றனர்.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-man-killed-by-a-gang-over-money-issue