சென்னை: மகள் கண்முன் தாய் கொலை; குழந்தையுடன் தப்பிய கணவர் – பதறவைக்கும் சிறுமியின் வீடியோ! – Vikatan

சென்னைச் செய்திகள்

மனதைப் பதறவைக்கும் வீடியோ

சரிதாவின் மூத்த மகளான 7 வயது சிறுமி, போலீஸாரிடம் என்ன நடந்தது என்பதை விரிவாகக் கூறுகிறார். அதை போலீஸார் வீடியோவாக எடுத்திருக்கின்றனர். அந்த வீடியோவில், “சம்பவம் நடந்தபோது நான் வீட்டுக்குள்தான் இருந்தேன். நான் வேணாம், வேணாம் என்று சொன்னேன். ஆனால் அடிச்சுக்கிட்டே இருந்தாரு. பக்கத்தில உள்ளவர்களிடம் போய் சொன்னேன். ஆனா யாருமே ஹெல்ப்புக்கு வரலை. ஐந்து தடவை இரும்பு பைப்பால அடிச்சாரு. அதுக்குப் பிறகு பாப்பாவைத் தூக்கிட்டுப் போயிட்டாரு.

சடலமாக சரிதா

அம்மாவுக்கும் அப்பாவுக்கும் என்ன பிரச்னைன்னு தெரியலை. அப்பாவோட பொண்ணு போன்ல பேசிச்சு. அதனால போன்ல பேசக் கூடாதுன்னு அம்மா சொல்லிச்சு. இன்னிக்கு அம்மா வேலைக்கு போறதா சொல்லிச்சு. உடனே அப்பா வேணாம் என்று சொன்னாரு. ஞாயிற்றுக்கிழமை போன்னு சொன்னாரு. அதனாலதான் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டை வந்துச்சு. தலையிலேயே அடிச்சதாலே ரத்தம் ஊத்திச்சு. தெருவுல போய் ஹெல்ப் கேட்டேன். ஆனா யாருமே ஹெல்ப் பண்ணலை” எனக் கண்ணீருடன் சிறுமி கூறியிருக்கிறார். சிறுமியின் சாட்சிதான் இந்த வழக்கின் முக்கிய ஆதாரம் என்கின்றனர் ஆவடி போலீஸார்.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-avadi-police-arrests-husband-over-wifes-murder