சென்னை: `ஆடைகளை அவிழ்த்து விடுவேன்!’ – கணவனை கைது செய்ய வந்த போலீஸாரை மிரட்டிய பெண் – Vikatan

சென்னைச் செய்திகள்

இதுகுறித்து சாஸ்திரி நகர் போலீஸார், ரத்தினம் மற்றும் அவரின் மனைவி உஷா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர். நடிகர் வடிவேல் போலீஸாக நடித்த கம்பீரம் சினிமாவில் வரும் நகைச்சுவை காட்சி போல் ஒரு சம்பவம்தான் நடந்திருக்கிறது.

இதுகுறித்து அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், “ரத்தினம், கள்ளச்சந்தையில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு வீட்டிலேயே வைத்து விற்றுவருகிறார். அதை இளைஞர்கள் வாங்கிக் குடித்துவருகின்றனர். அதனால்தான் காவல் நிலையத்துக்கு ரகசியமாக தகவல் தெரிவித்ததால் போலீஸாரும் அங்கு வந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இந்தச் சமயத்தில்தான் போலீஸை மிரட்ட உஷா, தீ வைத்துக் கொண்டார். இது அவருக்கு வாடிக்கை. கடந்த தடவை போலீஸார் வந்தபோது ஆடைகளை அவிழ்த்து விட்டு நிர்வாணமாக தெருவில் ஓடிவந்தார். அதன்பிறகுதான் பெண்கள் மற்றும் பெண் போலீஸார், உஷாவை போர்வையால் போர்த்தி வீட்டுக்குள் அழைத்துச் சென்றனர்” என்றனர்.

இதுகுறித்து சாஸ்திரி நகர் போலீஸார் கூறுகையில், “ரத்தினம் மீது அடையாறு காவல் மாவட்டத்தில் மட்டும் 20 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. மதுவிலக்கு பிரிவில் சரித்திர பதிவேடும் ரத்தினம் மீது இருக்கிறது. ரத்தினத்தின் வீட்டில் சோதனை நடத்தச் சென்றபோதுதான் உஷா, தீ வைத்துக் கொண்டார். அவரைக் காப்பாற்றிவிட்டோம். நல்லவேளை உடனடியாக தீ அணைக்கப்பட்டால் அருகில் இருந்த குடிசை வீடுகளில் தீ பரவவில்லை. ரத்தினம் மற்றும் உஷா மீது வழக்கு பதிவு செய்திருக்கிறோம்”என்றனர்.

Source: https://www.vikatan.com/news/crime/women-and-her-husband-arrested-in-chennai-in-shocking-incident