சென்னை: `சர்ச்சுக்குப் போகலாம்; கதவைத் திற!’- மனைவியைக் கொலைசெய்த கணவர் – Vikatan

சென்னைச் செய்திகள்

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் என் தாயார் மீது சந்தேகப்பட்டு கொண்டு அப்பா எங்களைப் பிரிந்து சென்று விட்டார். கொரோனா காலக்கட்டத்தில் வேலை இல்லாததால் நாங்கள் அப்பாவின் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டோம். பின்னர் பிழைப்புத் தேடி சென்னை வந்தோம். சென்னையில் நாங்கள் தங்கியிருந்த விலாசத்தை உறவினர்கள் மூலம் தெரிந்துக் கொண்ட அப்பா, நானும் தங்கையும் வீட்டில் இல்லாத நேரத்தில் அம்மாவிடம் வீண் தகராறு செய்து வந்தார். வேலைக்குச் செல்கிறேன் என்று வெளியே சென்று ஊரைச் சுற்றுகிறாயா என்று மிரட்டியதாக எங்களிடம் அம்மா கூறினார்.

மேலும், `உன்னை ஒழித்துக் கட்டினால்தான் பெண் பிள்ளைகள் நன்றாக இருக்கும்’ என்றும் அம்மாவை அப்பா மிரட்டி வந்தார். சில நேரங்களில் எங்கள் முன்னிலையில் அம்மாவை அப்பா தகாத வார்த்தைகளால் திட்டுவார். அப்போது, `என்னைக்கு இருந்தாலும் கத்தியால் குத்தி சாகடிப்பேன்’ என்று மிரட்டுவார்.

13-ம் தேதி மாலை நானும் தங்கையும் ஜவுளி கடைக்குச் சென்றோம். அப்போது அம்மாவையும் அழைத்தோம். அதற்கு அம்மா, உடல்நலம் சரியில்லை என்று கூறிவிட்டார். துணிகளை எடுத்து விட்டு பஸ்ஸில் வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். இரவு 10 மணியளவில் அம்மா போன் செய்தார். `வீட்டின் வெளியில் அப்பா நின்றுக் கொண்டு கதவைத் திறக்கும்படி கெஞ்சுகிறார்’ என்று கூறினார். அதற்கு நானும் தங்கையும் கதவைத் திறக்க வேண்டாம் என்று கூறினோம். அதன்பிறகு அம்மா மீண்டும் போன் செய்து, `சர்ச்சுக்குச் செல்லாம். கதவைத் திற’ என்று கூறுவதாகத் தெரிவித்தார். அதற்கு `கதவைத் திறக்க வேண்டாம்’ என்று நாங்கள் அம்மாவிடம் கூறினோம். அதன்பிறகு நாங்கள் வீட்டுக்கு வந்தபோது அம்மா ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போரடிக் கொண்டிருந்தார். அம்மாவிடம் விசாரித்தபோது அப்பாதான் கத்தியால் குத்தியதாகத் தெரிவித்தார். எனவே அப்பா மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். தலைமறைவாக உள்ள எட்வர்ட் லாரன்ஸை போலீஸார் தேடிவருகின்றனர்.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-police-arrests-husband-over-wife-murder