போதையிலிருந்த பாபுவின் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது. பின்னர், அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சையிலிருந்த பாபு, நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து ஐஸ்ஹவுஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், வழக்கு பதிவு செய்து பாபுவின் நண்பர்களிடம் விசாரித்தார்.
பாபுவின் மரணத்துக்குக் காரணமாக இருந்த அவரின் நண்பர்கள் சுப்பிரமணி, சார்லஸ் மற்றும் விக்னேஷ்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் பாபுவின் நண்பர்கள் 2 பேரை போலீஸார் தேடிவருகின்றனர்.
Source: https://www.vikatan.com/news/crime/chennai-corporation-employee-died-in-fire-accident