சென்னை: தாயின் நண்பரால் சிறுமிக்கு பாலியல் தொல்லை! – ஊரடங்கில் தொடரும் கொடூரங்கள் – Vikatan

சென்னைச் செய்திகள்

ஊரடங்கில் தொடரும் சம்பவங்கள்:

சென்னை மாதவரம் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமி குடியிருந்து வருகிறார். பத்தாம் வகுப்பு படித்து வரும் அந்தச் சிறுமி 12.4.2021-ல் கடைக்குச் சென்றிருக்கிறார். அப்போது மாத்தூர் பகுதியைச் சேர்ந்த கந்தன் (34) என்பவர், சிறுமியின் கையைப் பிடித்து இழுத்திருக்கிறார். பின்னர் அவர் காதலிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியிருக்கிறார். சிறுமி சத்தம் போட்டதும் கந்தன் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து சிறுமி அவரின் தாயிடம் கூறியிருக்கிறார். ஆத்திரமடைந்த சிறுமியின் தாய், மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து சிறுமியிடம் அநாகரீகமாக நடந்த கந்தனை போலீஸார் கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர்

கைது
Representational Image

சென்னை அண்ணாநகர் காவல் மாவட்ட எல்லைக்குள் 17 வயது சிறுமி ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார். சிறுமிக்கு தெரிந்த முத்து என்பவர், தன்னை காதலிக்கும்படி நீண்ட நாள்களாக அவருக்குத் தொல்லை செய்து வந்திருக்கிறார். 6.4.2021-ல் சிறுமி அண்ணா வளைவு பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது கந்தன், அவரின் கையைப்பிடித்து இழுத்திருக்கிறார். இதுகுறித்து சிறுமியின் அம்மா அளித்த புகாரின் அடிப்படையில் அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் முத்துவைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் சிறுமியின் வீட்டின் அருகில் முத்து குடியிருந்திருக்கிறார். தற்போது அவர் வேறு இடத்துக்கு குடியேறிவிட்டார். இருப்பினும் சிறுமியை ஒருதலையாக காதலித்த முத்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இதையடுத்து முத்துவை போலீஸார் கைது செய்திருக்கின்றனர்.

ஊரடங்கு காலக்கட்டத்தில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன. அதை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் மட்டும் சென்னையில் போக்சோ சட்டத்தின் கீழ் 4 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-4-youths-in-pocso-act-in-two-days