[embedded content]
சென்னையில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க 10-ஆவது நாளாக பொதுமக்கள் இன்றும் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். மருந்து வாங்க எட்டு மணி நேரத்திற்கு மேல் ஆவதால், அடிப்படை வசதியின்றி தவிப்பதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
Advertisement
இதுவரை 25 ஆயிரம் குப்பிகள் ரெம்டெசிவிர் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், நாள் ஒன்றுக்கு 500 பேருக்கு ரெம்டெசிவிர் விற்பனை செய்யப்படுவதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
Source: http://www.puthiyathalaimurai.com/enews/101438/In-Chennai-People-waiting-in-long-queues-for-the-10th-day-to-buy-Remdesivir-which-helps-to-COVID19