இதையடுத்து குமாரை கொலை செய்ய ராஜாவும் ஆசாவும் திட்டமிட்டனர். சம்பவத்தன்று குமாரின் கழுத்தை நெரித்து இருவரும் கொலை செய்திருக்கின்றனர். பின்னர் எதுவும் நடக்காதது போல இருவரும் அமைதியாக இருந்திருக்கின்றனர். குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் கழுத்தை நெரித்தற்கான அடையாளங்கள் இருந்தன. அதன்அடிப்படையில் குமாருடன் வேலைப் பார்த்து வரும் ராஜா, ஆசா ஆகியோரிடம் விசாரித்தபோதுதான் குமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறோம். தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றியிருக்கிறோம்” என்றனர்.
பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற சம்பவத்தில் கட்டடத் தொழிலாளியைக் சக தொழிலாளி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Source: https://www.vikatan.com/news/crime/youth-murder-in-chennai-who-misbehaved-with-a-women