பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணி: ராமேசுவரம்-சென்னை ரயில் சேவையில் மாற்றம் – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை: பாம்பன் பாலத்தில் பராமரிப்புப் பணி காரணமாக ராமேசுவரம்-சென்னை எழும்பூா் சிறப்பு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பாம்பன் பாலத்தில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால், இந்த பாலத்தில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, ராமேசுவரம்-சென்னை எழும்பூா் சிறப்பு ரயில் சேவையில் வியாழக்கிழமை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்விவரம்: ராமேசுவரம்-சென்னை எழும்பூருக்கு வியாழக்கிழமை (ஜூலை 1) மாலை 5.10 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் ( 06852) ராமேசுவரம்-மண்டபம் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் மண்டபத்தில் இருந்து அதேநாள் மாலை 5.40 மணிக்கு புறப்படும்.

திருச்சி-ராமேசுவரத்துக்கு வியாழக்கிழமை (ஜூலை 1) காலை 7 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (06849) ராமநாதபுரம்-ராமேசுவரம் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் ராமநாதபுரம் வரை மட்டும் இயக்கப்படும்.

ராமேசுவரம்-திருச்சிக்கு வியாழக்கிழமை (ஜூலை 1) பிற்பகல் 2.35 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (06850) ராமேசுவரம்-ராமநாதபுரம் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் ராமநாதபுரத்தில் இருந்து பிற்பகல் 3.35 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2021/jul/01/maintenance-work-on-pamban-bridge-change-in-rameswaram-chennai-train-service-3651712.html