மாநகராட்சி ஹேப்பி நியூஸ்; சென்னை மக்கள் நிம்மதி! – Tamil Samayam

சென்னைச் செய்திகள்

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

பொங்கல் தொகுப்பில் இத்தனை கோடி ஊழல் – பட்டியலிட்ட ஹெச்.ராஜா

அதன்பிறகு கொரோனாவின் தாக்கம் குறைந்து வந்தது. இதனால் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து செயல்படுத்தியது. இதற்கிடையில் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

மரத்தடியில் நீதிமன்றம்; சிவில், கிரிமினல் பெட்டிகளில் மனு!

இதனால், அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி கடைகள், ஓட்டல்கள், சினிமா திரையங்கு 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இரவு நேரம் ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்த இரவு நேர ஊரடங்கு தமிழகத்தில் தற்போது அமலுக்கு வந்துள்ளது. இந்த விதிமுறைகள் உடனடியாக வந்ததை அடுத்து தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறதா? என அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனர்.

சட்டக்கல்லூரி மாணவனுக்கு லாடம்; உள்ளே போகும் 9 போலீஸ்?

இந்நிலையில் சென்னை பெருநகர மாநகராட்சியில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை வெகுவாக குறைந்து உள்ளதாக மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்து உள்ளார்.

மேலும், முகக் கவசம் அணிவது மிகவும் அவசியம். இல்லை என்றால், தொற்று எளிதாக பரவும் என்றும் கொரோனா தொற்று பாதிப்பை குறைக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் மாநகராட்சி ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார். இதனால் சென்னை மக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

Source: https://tamil.samayam.com/latest-news/chennai-news/corporation-commissioner-said-corona-virus-infection-has-decreased-in-chennai/articleshow/89041124.cms