கடன் தொல்லையால் கணவன் மனைவி தற்கொலை – சென்னையில் அதிர்ச்சி சம்பவம் – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
சென்னை ராயபுரத்தில் கடன் தொல்லையால் கணவன் மனைவி இருவரும் தற்கொலை  செய்து கொண்டதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை ராயபுரம் பிச்சாண்டி லேன்  பகுதியில் வசித்த மகசர் அலி மற்றும் பர்கத் நிஷா என்ற தம்பதி இருவரும்  வீட்டினுள் தூக்கு மாட்டி இறந்து கிடந்த நிலையில் இருந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இறந்தவர்களின் மகள் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் நிலையில் மாலை பள்ளிக்கூடத்தில் இருந்து வீடு திரும்பிய பொழுது வீட்டின் உட்புறமாக பூட்டி இருந்ததால் தனது மாமாவிற்கு போன் செய்துள்ளார்.

Also Read: கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்த தந்தையை கொன்ற மகள்.. தாயும்.. கள்ளக்காதலனும் கைது

இந்நிலையில் அவருடைய மாமா முகமத் ரோசன் என்பவர் அக்கம்பக்கத்தினரோடு சேர்ந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கும் போது வீட்டினுள் இருவரும் தூக்கு மாட்டி இறந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக இச்சம்பவம் தொடர்பாக ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் இருவரின் உடலை கைப்பற்றி ராயபுரம் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Also Read: சகோதரி மகள் கூறியதைக்கேட்டு அதிர்ந்துபோன மாமா.. காவலரான தந்தை போக்சோவில் கைது

கடன் தொல்லையால் இருவரும் தனக்குத்தானே தூக்குமாட்டி தற்கொலை செய்துக்கொண்டு இறந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக ராயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்: அசோக் குமார்

Published by:Ramprasath H

First published:

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source: https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-district-debt-issue-chennai-couple-commits-suicide-hrp-716068.html