சென்னை: சாப்பிடச் சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை – மதுபோதையில் சிக்கிய இளைஞர்கள் – Vikatan

சென்னைச் செய்திகள்

சென்னைன தி.நகர் காவல் மாவட்டத்தில் குடும்பத்தினருடன் 14 வயது சிறுமி வசித்து வருகிறாள். இவளின் அம்மா வனஜா (44). இவர் வீட்டு வேலை செய்து வருகிறார். வழக்கம் போல 29.4.2022-ம் தேதி வனஜா தன்னுடைய மகளை அழைத்துக் கொண்டு வேலைக்குச் சென்றார். மதியம் சாப்பிடுவதற்காக மகளை மட்டும் தனியாக வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். வீட்டுக்குச் சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வரவில்லை. அதனால் மகளைத் தேடி வனஜா வீட்டுக்குச் சென்றார்.

பாலியல் தொல்லை

அப்போது வீட்டில் மகள் இல்லை. அதனால் அவளை வனஜா தேடிய போது அருகில் உள்ள வீட்டுக்குள் இருந்து மகளின் அழுகை குரல் கேட்டது. உடனடியாக அங்குச் சென்று வனஜா பார்த்தார். அப்போது மகள் அழுதுகொண்டிருந்தாள். அவளின் அருகில் இரண்டு பேர் மது அருந்திக் கொண்டிருந்தனர். இதையடுத்து மகளிடம் என்ன நடந்தது என்று வனஜா விசாரித்தார். அப்போது சிறுமி, தன்னை மிரட்டி வீட்டுக்குள் அழைத்துச் சென்ற இரண்டு பேர் தனக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தாகக் கண்ணீர் மல்க கூறினார்.

Source: https://www.vikatan.com/news/crime/youths-arrested-in-pocso-case-in-chennai-after-mothers-complaint