ராயுடு ஓய்வா… என்ன சொல்கிறது சென்னை அணி? – Zee Hindustan தமிழ்

சென்னைச் செய்திகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கியமான வீரர்களில் அம்பத்தி ராயுடுவும் ஒருவர். இவர் திடீரென இன்று ஒரு ட்வீட் செய்தார்.

அந்த ட்வீட்டில், “இது எனது கடைசி ஐபிஎல் என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 13 வருடங்களாக 2 சிறந்த அணிகளில் அங்கம் வகித்து விளையாடியதில் எனக்கு ஒரு அற்புதமான நேரம் கிடைத்தது. 

அற்புதமான பயணத்திற்காக மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கேவுக்கு மனப்பூர்வமாக நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என குறிப்பிட்டிருந்தார். இந்த ட்வீட் சென்னை ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

மேலும் படிக்க | ஓய்வு பெறுவதாக அறிவித்து திரும்ப பெற்ற சிஎஸ்கே வீரர்!

இதனையடுத்து அவர் அந்த ட்வீட்டையும் டெலிட் செய்துவிட்டார். இருப்பினும் எதற்காக ராயுடு அப்படி ஒரு ட்வீட்டை பதிவு செய்தார் என பலரும் கேள்விகளை எழுப்பிவருகின்றனர். 

Rayudu

இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், “ரியாக செயல்படாததால் சற்று அவர் ஏமாற்றம் அடைந்துள்ளார்.

மேலும் படிக்க | விராட் கோலியின் விரக்தி – மைக் ஹெசன் விளக்கம்

அதனால், தவறுதலாக அந்த டுவிட்டை பதிவிட்டுள்ளார். அவர் ஓய்வு பெறவில்லை”.அவர் எங்களுடன் இருப்பார்” என்றார். இதனால் சென்னை ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source: http://zeenews.india.com/tamil/sports/rayudu-is-not-retiring-chennai-team-description-392856